வெள்ளை கம்பள வீதியிலே
உலா வரும் திருடி நீ!
இல்லை; என்றால் ஏன்?
இரவில் மட்டும் வருகிறாய்
தலைவன் சூரியன் வந்தால் -வாடுகிறாய்
தெரிந்தால் ஓடுகிறாய்
அதிலும் கொஞ்சம் கொஞ்சமாய்
பயத்தில் தேய்கிறாய்
பெண்ணென்றால்! என்னவாம்
இரண்டுங்கெட்டான் பொலப்புதானா?
தேய்கிறாய்... வளர்கிறாய்
காணாமலும் போகிறாய்!
பொடி பயலுகள் உன்னை
பார்த்து கண்சிமிட்ட வேண்டுமா?
பிறகு ஏன் நட்சத்திர உலா வேலையில்
தேரோட்டம் காட்டுகிறாய்?